வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/10/download-4-13.jpg)
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் கிளை தொழிற்சங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருப்பதால், அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி கிடைத்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செம்பியன்பற்று விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைகள் வழங்கிவைப்பு!
மீசாலையில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க தீர்மானம்!
உரம் விநியோகிக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி - உரப் பிரிவின் செயலக பணிப்பாளர்!
|
|
முகக் கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது - தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – பிரதமர் மஹிந்த...
கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீ...