உரம் விநியோகிக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி – உரப் பிரிவின் செயலக பணிப்பாளர்!

Friday, July 20th, 2018

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
சிறுபோகத்திற்கான உர விநியோகம் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை 08 இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லுக்கான 50 கிலோ எடைகொண்ட உர மூடை 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஏனைய பயிர்களுக்கான உரம் 50 கிலோ மூடை ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுபோகத்திற்கு உரத்தை வழங்குவதில் எந்த வித குறைபாடும் இடம்பெறவில்லை என்று செயலகம் தெரிவித்துள்ளது.
சிறுபோகத்திற்கு தேவையான உரம் அரசாங்கத்திற்குட்பட்ட இரண்டு உர நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டது, ஏனைய பயிர்களுக்கான உர வகை தனியார் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: