குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 21st, 2021

குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ பிரேண்ட் (Yoo Brand) பாதணி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேற்றையதினம் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர் –

 “எமது நாட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையர்களான நம் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் காண்பது ஒரே கனவு. அது நம் நாடு அபிவிருத்தியடைந்த நாடாகும் கனவாகும்.

நாம் உலகின் மத்தியில் பிற நாடுகளைவிட மானுட குணாதிசயங்களினால் சிறந்த தேசமாகும். வரலாற்றில் எமது நாடு பல்வேறு துறைகளில் மதிப்பு வாய்ந்ததாக விளங்குகின்றது.

அண்மைக் காலத்தில் வெவ்வேறு அரசாங்கத்தின் கீழ் நாட்டின் குறிக்கோள் மாற்றமடைந்தது. எனினும், நாட்டு மக்களதும், நாட்டினதும் குறிக்கோள் தொடர்பில் நாம் எப்போதும் பொறுப்புடன் பணியாற்றினோம்.

அத்துடன் தற்போது கொவிட் நெருக்கடி முழு உலகையும் ஆட்கொண்டுள்ளது. பிற நாடுகளில் போன்றே நமது நாட்டிலும் அது மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது.

வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு துறை, அரச ஊழியர்கள் போன்றே, தனியார் துறையை சேர்ந்த நீங்களும், நாட்டின் அனைத்து பொதுமக்களும் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த சவாலை வெற்றிக்கொள்ள பாடுபடுகின்றனர். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அதற்கு தேவையானவற்றை செய்துள்ளோம்.

பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தேனும் உள்ளூர் தொழில்முனைவோரை முன்னேற்றுவதற்கு நமக்கு முடிந்துள்ளது. இந்த பாதணி தொழிற்சாலை முழு நாட்டிற்குமான சொத்தாகும். உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பாடசாலை பாதணிகளை விட 30 சதவீம் குறைவாக இத்தொழிற்சாலையின் பாதணிகள் விற்பனை செய்யப்படும்.

அதேபோன்று விளையாட்டு மற்றும் நடைபயிற்சியின் போது அணியும் பாதணிகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப உயர் தரத்தில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனைத்து பாதணிகளும் Made In Sri Lanka என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின்படி, உள்ளூர் பொருளாதாரக் கொள்கைக்குள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே எங்கள் குறிக்கோள்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், எங்கள் உள்ளூர் விவசாயிகளையும் தொழிலதிபர்களையும் முன்னேற்ற விவேகமான முடிவை எடுத்தோம். மஞ்சள் மட்டுமல்ல, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தினோம்.

இப்போது நம் நாட்டின் விவசாயிகள் தானாகவே பயனடைகின்றனர். மறுபுறம், நம் நாட்டில் உயர்தர தயாரிப்புகளை நுகரும் வாய்ப்பும் பொதுமக்களுக்கு கிடைக்கும்..

அத்துடன் இந்த தொழிற்சாலை தெற்காசியாவில் இரண்டாவது பெரிய காலுறை ஏற்றுமதி உற்பத்தி நிறுவனமும் உங்களுக்கு சொந்தமான இவ்வகையிலேயே பாரிய சேவையை வழங்கும் நிறுவனமாகும்.

எனவே, ஒரு குண்டூசியேனும் தயாரிக்காத ஒரு நாடு என்று நம்மை நாமே குறைக் கூறிக் கொள்வதில் பயனில்லை. நாம் கடந்த காலத்திலிருந்து நல்லதை பெற்று எதிர்காலத்திற்காக இன்று நாம் செயற்படுத்த வேண்டும் என தெரிவித்த பிரதமர் ஒரு வளமான நாட்டை நோக்கிய பயணத்திற்கு அத்தகைய ஒரு தொழிற்சாலையின் சக்தி மகத்தானது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: