வட்டி வீதத்தில் மாற்றங்கள் இல்லை – மத்திய வங்கி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/centra.jpg)
அமுலில் உள்ள நிதிக் கொள்கை உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார சூழலுக்கு பொருத்தமானது என இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் சபை தீர்மானித்துள்ளது.
வட்டி வீதத்தை தனி அலகினால் பேணுதல், இதன் மூலம் நிலைபேறான அபிவிருத்திப் பாதைக்குரிய வசதிகளை ஏற்படுத்துதல் என்பனவாகும். இதனையடுத்து பூகோள பொருளாதார செயற்பாடுகள் தொடர்ந்தும் வலுவடையும் எனவும் இலங்கையின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சாதகமான நிலைக்கு மாறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கான காரணம் கைத்தொழில் சேவைகள் துறைகளின் வளர்ச்சியும், விவசாயத்துறை வழமைக்கு திரும்புகின்றமையேயாகும் என்றும் மத்தியவங்கியின் நாணயச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அவதான நிலையம்!
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் - அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தாக க...
விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை விரைவில் நிறுவ நடவடிக்கை: இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவிப்பு!
|
|