யாழ்.உட்பட பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய முடிவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/250928131.jpg)
யாழ்ப்பாணம் உள்ளிட்ட ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சப்ரகமுவ, கிழக்கு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம், ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சப்ரகமுவ, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களின் பணியாளர்களுக்காக வசிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிரதேச மத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 4 மாடிகளை கொண்ட கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பேராதனை பல்கலைக்கழகத்தில் பழமையான கட்டடம் ஒன்றினை புனரமைப்பு செய்வதற்கும் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
பிழையான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராக வருகின்றது புதிய சட்டம்!
நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் - நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவ...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் - தேர்தலை நடத்துவது தொடர்பில் விரிவாக ஆ...
|
|