வடக்கின் முதல்வருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க தயார்!
Monday, October 3rd, 2016அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்பதி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடையங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கின் இனவாத நகர்வுகளும் அதன் மூலமாக விக்கினேஸ்வரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் வடமாகாண உறுப்பினர்களும் மற்றும் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் நகர்வுகளை எவ்வாறானது என வினவிய போதே பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
Related posts:
ஆயுள் கைதிகளுக்க சலுகை வேண்டும் - சிறைக் கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பு கோரிக்கை!
புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு - அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையு...
பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு - 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 296 பேர் கைது!
|
|