மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/01/271737948_662731991742167_2720615489124146403_n.jpg)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற இருதரப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கியினால் கடந்த வாரம் 900 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்ட நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த உயர் ஸ்தானிகர், இலங்கைக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஆசிய கணக்குதீர்வக ஒன்றிய கொடுப்பனவான 500 மில்லியன் டொலர் ஒத்திவைப்பு, 400 மில்லியன் மொலர் பணப் பரிமாற்றம் ஆகியவை அடங்குகின்றன.. பொருளாதார மறுசீரமைப்பு, வளர்ச்சிக்காக இலங்கையுடன் இணைந்திருக்கும் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டிற்கிணங்க இந்நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|