பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை.!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/05/download-3-11.jpg)
தேசிய அரசாங்கத்தினால் பெறுமதி சேர்வரி (வற்வரி) அதிகரிக்கப்பட்டதனையடுத்து பேருந்துகளை உரிய வகையில் பாராமரிப்பது தொடர்பில் பேருந்து உரிமையாளர்களுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளமையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜீலை மாதம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்கள் தொடர்பிலான புதிய சூத்திரமொன்றை இலங்கை போக்குவரத்து அணைக்குழுவுக்கு சமர்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வற் வரி காரணமாக பேருந்து கட்டணங்களின் அதிகரிப்புக்கு பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜயரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Related posts:
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை!
சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப...
|
|