பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்வு – லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம்!

நாடு முழுவதிலும் இயங்கி வரும் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபாவினால் உயர்த்தப்படுகின்றது.
இன்றுமுதல் இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படும் என லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 142 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரமற்ற அரிசி வகை விற்பனை!
மக்கள் நலன் தொடர்பில் மஹிந்தவின் விசேட உரை!
இந்தியாவை அடுத்து சீனாவிடமிருந்தும் இலங்கைக்கு வருகின்றது அரிசி - மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உ...
|
|