நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Tuesday, November 16th, 2021

நாட்டில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மக்கள் கவனக்குறைவாக நடந்துகொண்டதன் விளைவாக தற்போது காணப்படும் கொரோனா பாதிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க, கொரோனா நடைமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, வெளியில் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: