நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுகிறார் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் !

Saturday, September 11th, 2021

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் அவர், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு, புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு தெரிவுசெய்யப்படும் நபர் தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேநேரம், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநராக பதவி வகிக்கும் பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன், எதிர்வரும் செவ்வாய்கிழமை அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நிறைவேறியது ஈ.பி.டி.பியின் கோரிக்கை : காப்பெற் வீதியாக புதுப் பொலிவுபெறுகிறது ஊர்காவற்றுறை மெலிஞ்சிம...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது கொரோனாவே காரணம் - வேறெந்த அரசியல் நோக்கங்களும் கிடையா...
புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் - சுகாதார பூச்சியியல் அதிகாரிகள்...