கோர விபத்து: சிலாபம் பகுதியில் 4 பேர் பலி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/02/625.0.560.320.160.600.053.800.700.160.90-4.jpg)
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தின் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பேருந்தில் சிக்கியுளளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
சமூகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் - ஜன...
எதிர்வரும் சில வாரங்கள் நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் - பிரதமர் ரணில் எச்சரிக்கை!
துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு - அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு...
|
|