கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் திடீரென ஏற்பட்ட தீ – சில மணி நேரம் தடைப்பட்டது மின்சாரம் !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/11/download-9-7.jpg)
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.
கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதான மின் வடத்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார சபையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் , மின்சாரத்தை துண்டித்து , மின் வடத்தில் பற்றிய தீயை அணைந்தனர்.
பின்னர் மீள அவற்றை சீர் செய்து அப்பகுதிக்கான மின்சாரத்தை வழங்கினர். குறித்த சம்பவத்தால் , அப்பகுதியில் சில மணிநேரம் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 11 பேர் படுகாயம்!
பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறு...
பரீட்சை முறைமைகள் - பல்கலைக்கழக நுழைவு என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சு அற...
|
|