யாழில் தந்தையின் கொடூர செயல் – மகன் வைத்தியசாலையில்!

Wednesday, November 21st, 2018

யாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

போதை தலைக் கேறிய நிலையில் தந்தை சிறுவனைக் கடித்துள்ளார். கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சிறுவன் கை, முதுகு, முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசரணைகளி்ன் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும், தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: