கணவனை இழந்த பெண் ஒருவருக்கு வாழ்வாதாரமாக கொடுத்த 11 ஆடுகள் குத்திக் கொலை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/07/37-b.jpg)
விசுவமடு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் 11 ஆடுகளை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக விசுவமடு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளனர்.
கணவனை இழந்த பெண் ஒருவருக்கு வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட 03 ஆட்டுக்குட்டிகள் உள்ளிட்ட 11 ஆடுகள் ஒரே இரவில் இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தகாலத்தில் கணவனையிழந்த குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இந்த ஆடுகள் வாழ்வாதாரமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆடுகளை ஈன இரக்கமின்றி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாக அந்தப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Related posts:
சிகரட்டுகளின் விலைகள் அதிகரிப்பு!
போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது - போராட்டக்காரர்கள் இதை புரிந்துகொள்ள வேண்ட...
ஏற்றுமதி தொடர்பான தடைகளை நீக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்...
|
|