பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை – பேக்கரி உரிமையாளர் சங்கம்!
Saturday, March 28th, 2020தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவுவகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஊரடங்குச்சட்டம் காரணமாக மக்களின் உணவுத்தேவையின் ஒருபகுதியாக பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களை அவர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
Related posts:
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 13 கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க முடிவு !
வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்!
|
|