நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு!

Saturday, February 11th, 2017
நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும், தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக இவ்வாறு நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உள்ளதெனவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி குறைவடைந்து உள்ளதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீரேந்துப் பகுதிகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

proxy-url=http%3A%2F%2Fstatic3.businessinsider.com%2Fimage%2F4f9588376bb3f7ec5000000f-1200%2Fits-one-of-the-biggest-hydropower-complexes-in-the-world.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F-

Related posts: