நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு!
Saturday, February 11th, 2017நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும், தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக இவ்வாறு நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உள்ளதெனவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி குறைவடைந்து உள்ளதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீரேந்துப் பகுதிகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தலைக் கவச தடையின் இடைக்காலத் தடை மேலும் நீடிப்பு!
நாட்டில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள் – இன்றுமுதல் சதொச விற்பனையகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் ...
|
|