கட்டாய பாடமாக தகவல் தொழில்நுட்பம் – கல்வி அமைச்சர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/a9ab531dde82ff9a3c9bff13cffddb5f_XL.jpg)
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் கட்டாய பாடமாக மாற்றப்படும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். கிராம மட்டத்தில் தகவல்தொழில்நுட்ப பாட அறிவை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில் அனைத்துப் பாட விதானங்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பாடமாக அமையவுள்ளது. நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்குமுறையான தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்க கல்வி அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
சரியான நேரத்தில் தகுதியான ஒவ்வொருவருக்கம் தடுப்பூசி வழங்கப்படும் - இராணுவத் தளபதி உறுதி!
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது - தொற்று நோயியல் பிரிவு அறிவிப்...
பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை - எதிர்வரும் 15 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளை ஆரம...
|
|