கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு விரைவாக கொண்டுவர நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, December 25th, 2020

கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் குழுக்கள் தொடர்பாக – அவர்களது தேவை மற்றும் வாழும் சூழலின் அபாயத் தன்மை என்பவற்றின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட – நோய் பரவும் சாத்தியம் அதிகம் காணப்படும், ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: