அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்றம் அனுப்புங்கள் – றெமீடியஸ்!

Thursday, July 9th, 2020

அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றவர் என்கின்ற ஆணவத்துடன் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணியும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார் –

அரியாலைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவத்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்  –  கடந்த 26 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயக அரசியலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படாத ஒரு தமிழ் அரசியல் தலைவராக இருந்துவரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம்முறை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விரப்புவாக்குகளை பெற்றவராக தெரிவாவதற்கு உங்கள் ஒவ்வொருவரது ஆதரவுப் பலமும் அவருக்கு அவசியமான கிடைக்கவேண்டும்.

அவ்வாறு அவரது கரங்களை பலப்படுத்த நீங்கள் ஒன்றிணைவதனூடாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் பலமும் அதிகரிப்பதுடன் தமிழ் மக்களின் தீரா பிரச்சினைகளுக்கும் அதனூடாக தீர்வு கிடைக்கும் வழியும் கிட்டும்.

அதற்காக வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சரியாக பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் – ஆணைக்குளுவின் தலைர் மகிந...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்...
எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு - இராணுவத் தளபதி தெரி...