ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வாரி வீசுகிறார்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/01/download-2-15.jpg)
ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் அரசாங்கத்தில் உள்ள சிலராலும் வெளியாள்களாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமர்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையால் அவர்கள் ஜனாதிபதி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இந்த நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதாக ஜனாதிபதி விடுத்துள்ள சபதம் அரசு தரப்பில் உள்ள சிலர் உட்பட பலரை எரிச்சலடைய செய்துள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்தஅவர்கள் ஜனாதிபதி மீது சேற்றை வீசுகிறார்கள் என கூறிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதியை தொடர்ந்தும் பாதுகாப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசியல் இலாபத்திற்காக அப்பாவி மக்களை கொலை செய்தவர்கள் சிலர் இன்னும் ஜனநாயகத்தின் வெற்றியாளர்களாக மாறுவேடமிட்டு உயிருடன் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|