உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/09/download-8-8.jpg)
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்போது சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் கடமையாற்றுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறித்த ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
30 சதவீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
தொடருந்து இயந்திரத்திற்குள் பயணிகள் பிரவேசம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை!
வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை!
|
|