தொடருந்து இயந்திரத்திற்குள் பயணிகள் பிரவேசம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை!
Saturday, November 10th, 2018
தொடருந்து இயந்திரத்தினுள் பயணிகள் பிரவேசித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில், இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொளி வெளியாகியுள்ள நிலையில், தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினரால் இந்த அறிவிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் - ஆறு உற்பத்தி...
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை - தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு அறிவிப்பு...
|
|
|


