உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏழாலை தொந்தனை பகுதி மக்களுக்கு குளாய்க்கிணறு அமைப்பதற்கான நிதி உதவி வழங்கிவைக்கப்படுள்ளது.
கட்சியின் பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதியினர் விடுத்திருந்த கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பார்வைக்கு கொண்டுசென்றதன் அடிப்படையில் குறித்த திட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கமைய இன்றையதினம் உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் சந்திரன் (வலன்ரயன்) அவர்களால் பயனாளிக்கு இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்து.
Related posts:
1996 இல் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது பற்றி விளக்கும் அர்ஜீன ரணதுங்க!
வாக்காளர் இடாப்பு பதிவுகள் இன்றுடன் நிறைவு!
கோண்டாவில் ஐயப்பன் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்தார்!
|
|