முக்கிய ஆவணங்கள் மாயமானதால் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் அலுவலகம் சீல்!

Friday, February 3rd, 2017

பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உரித்துடைய ஆவணங்கள் சில மற்றும் கணினித் தரவுகள் காணமற்போன சம்பவத்தையடுத்தே உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராகச் சட்டத்தரணி நதுன் பெர்ணன்டோ கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். எனினும் முன்னாள் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் சிலர் கடந்த சனிக்கிழமையிலிருந்து அந்தக் காரியாலயத்திற்கு வந்து சென்றதாக அறியமுடிகின்றது.

அந்த அலுவலகத்திற்கு வந்நிருந்தவர்களே அங்கிருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கணினித் தரவுகள் சிலவற்றையும் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி நதுன் பெர்ணான்டோ தனது கடமைகளை உத்தியோபூர்வமான நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். ஆவணங்கள் மற்றுமு; கணினித் தரவுகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

cpc_0-415x260

Related posts: