பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு..!
Wednesday, November 27th, 2019கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்த பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வு மற்றும் விரிவுரை என்பவற்றை இன்று நள்ளிரவுடன் நிறைவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.
இதற்கமைய, அந்த காலப்பகுதியில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு இணையான வினாத்தாள்கள், சுவரொட்டிகள், கையேடுகள் என்பவற்றை வைத்திருக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள், காவற்துறையினர் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 எனும் எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
Related posts:
|
|