ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச உப அலுவலகம் ஒன்று ஊர்காவற்துறை நகரில் திறந்து வைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/unnamed-1-3.jpg)
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள கட்சியின் ஈழ. மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய கட்டமைப்பின் ஒரு அங்கமாக மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பிற்கமைய ஊர்காவற்றுறை பிரதேசத்தின் உப அலுவலகம் ஒன்று ஊர்காவற்றுறை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் கட்சியின் குறித்த பிரதேச உப அலுவலகத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளருமான வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) ஆகியோர் சம்பிரதாய பூவமாக நாடாவெட்டிதிறந்துவைத்தனர்.
இந்நிகழ்வின்போது ஊர்காவற்துறை பிரதேச நிர்வாக செயலாளர் மருதயனார் ஜெயகாந்தன் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர்கலந்து பங்குகொண்டிருந்தனர்.
Related posts:
கடும் காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன - பாதுகாப்பு இராஜாங்க அமைச...
|
|