இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

தொடருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுக்கும் நோக்கில் தேவையான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.
இதன்காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக பஸ் சேவைகளும் மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் உபாலி மாரசிங்க கூறினார்.
உரிய பஸ் டிப்போக்கள், பிரதேச முகாமையாளர்களுக்கு இது தொடர்பில் உரிய ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
Related posts:
சாரதி கவனக் குறைவு: அதிர்ச்சியில் பெண் பலி!
அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அ...
குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க நடவடிக்கை!
|
|