இன்றும் மழையுடனான வானிலை காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/11/download-1-26.jpg)
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துங்கள் - கல்வி அமைச்சர் கோரிக்கை!
முப்பது வருட யுத்ததை வெற்றிகொண்டதில் எமக்கும் பங்குண்டு – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!
சிவனை நினைந்து பெறும் ஆன்மீக பலமானது, ஒட்டுமொத்த நாட்டிற்கே கிடைக்கும் ஆசீர்வாதமாகவே கருதுகின்றேன் ஜ...
|
|