அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/07/Tamil-News-Sri-Lanka-2nd-High-Court.jpg)
மாகாண சபைகளின் ஒப்புதல் இல்லாமல் அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் நாடாளுமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
அரச காணிகள் விசேட சட்டமூலத்தின் சரத்துகள் ஊடாக பேசப்படுகின்ற விடயங்கள், மாகாண சபை விடயங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால், குறித்த சட்ட மூலம் தொடர்பாக மாகாண சபைகளின் ஆலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது, உயர்நீதிமன்றின் நிலைப்பாடாகும்.
இதனால் குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இணைக்க முடியாது என்று, பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
Related posts:
வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்புபவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் - சுகாதார பரிசோதகர் சங...
முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளு...
தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாள் விநியோகம் - வட்டுக்கோட்டையில்...
|
|
ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனின் சேவை மறக்கமுடியாததொன்று - உதவிக்கல்விப்பணிப்பாள...
கொரோனாவை கட்டுப்படுத்த உழைத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்...
தூரநோக்கற்ற ஏமாற்றும் திட்டங்களை மக்களிடம் திணிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரும்புவதில்லை - ஈ.பி....