அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது!

மாகாண சபைகளின் ஒப்புதல் இல்லாமல் அரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் நாடாளுமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
அரச காணிகள் விசேட சட்டமூலத்தின் சரத்துகள் ஊடாக பேசப்படுகின்ற விடயங்கள், மாகாண சபை விடயங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால், குறித்த சட்ட மூலம் தொடர்பாக மாகாண சபைகளின் ஆலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும் என்பது, உயர்நீதிமன்றின் நிலைப்பாடாகும்.
இதனால் குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இணைக்க முடியாது என்று, பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
Related posts:
யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் இரவு வேளைகளில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத...
முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வியலுக்கு ஒளியேற்றிக் கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியி...
நான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் - கோத்தாபய நம்பிக்கை!
|
|