அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, January 14th, 2022

2024 ஆம் ஆண்டுமுதல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள ஆறுகளிலிருந்து மணலை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2021 முதல் 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மணல் தேவை 57 மில்லியன் கன மீற்றராக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் 42 மில்லியன் கனமீற்றரே உள்ளது.

அத்துடன் ஆறுகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மணல் எடுப்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை கடலில் ஆழமாகத் தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டாலும், மீனவ மக்களின் எதிர்ப்புக் காரணமாக மணல் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: