அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவுறுத்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/06/images-7.jpg)
அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நுகர்விற்கு தேவையான அரிசியின் அளவு மாதாந்தம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் ஆகும்.
இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கூரைச் சூரியப் படல்கள்!
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு; 45 ஆயிரம் பேர் அரச சேவையில் இ...
கல்வியிலே சிறந்த மாவட்டமென கூறிக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்போமேயானால் யார் குற்றவா...
|
|