புகையிரத பயணத்தில் மோசடி : 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்.!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/e28b8f34da6129ea97045d2cd3b53642_XL-copy-1.jpg)
புகையிரத பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் 3வது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று 2வது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா புகையிரத திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் 108 பேர் ரயல்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, அபராத தொகையாக 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த அபராத தொகையை செலுத்த மறுத்த 10 பேர் கம்பஹா பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
58 ஐ தாண்டியது உயிர்ப்பலி! 132 பேரை காணவில்லை!!
இலங்கையிலும் பூமியதிர்ச்சி !
கொரோனா பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்திருப்பதானது மிகவும் ஆபத்தானது -இராணுவ தளபதி எச்சரிக்கை!
|
|