இலங்கையிலும் பூமியதிர்ச்சி !

Sunday, September 11th, 2016

பகுதியில்  நேற்று இரவு 9.00 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் சிறு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்களுக்குள்ளானதாகவும் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் காரணமாக மக்கள் மத்தியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.இதேவேளை, பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று 6.1 ரிச்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

14292244_578347139016732_539714507407425307_n

14224807_578346992350080_690039615325314681_n

Related posts: