நாட்டில் நெத்தலி கருவாடு உற்பத்தி அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/1519110707_1116913_hirunews_SooriyanlogoNEWSTHUMBcopycopy.jpg)
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீடிப்பதையடுத்து நெத்தலி கருவாடு உற்பத்தியில் பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதுள்ள காலநிலையில் தினமும் அதிக நெத்தலி மீன்கள் பிடிக்கப்படுவதால் அவற்றை கருவாடாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்நடவடிக்கைகளில் உள்ளூர் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நெத்தலி கருவாடு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் நாவலடி, வாகரை, எத்துக்கால, பூநொச்சிமுனை, களுவாதளை ஆகிய கரையோர பிரதேசங்களில்இடம்பெற்று வருகின்றன.
தொகை வியாபாரிகளுக்கு ஒரு கிலோ நெத்திலி கருவாட்டை 750 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் 31 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!
கொரோனா தொற்றின் எதிரொலி - காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருகிறது - வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ...
|
|