தேசிய மறுசீரமைப்பு பொறிமுறை அறிக்கை இம்மாதம் சமர்ப்பிப்பு!

தேசிய மறுசீரமைப்பு பொறிமுறைகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் தமது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த குழு செயற்பட்டு வருகிறது.தேசிய மறுசீரமைப்புக்காக, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல், நட்ட ஈடு வழங்கல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய பொறிமுறைக் குழுக்களை உருவாக்கும் நோக்கில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த வருட இறுதிக்குள் நான்கு பொறிமுறைக் குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக கு...
கொடூரத் தாக்குதலுக்குள்ளான 4 வயது குழந்தை பண்ணை பாலத்தில் மீட்பு - சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள...
|
|