7 வயது சிறுவனை கொதிநீரில் தள்ளிய வளர்ப்புத் தாய் கைது!
Tuesday, September 6th, 2016
மஸ்கெலியா பெரிய சூரியகந்த பகுதியில் 7 வயது சிறுவனை கொதிநீரில் தள்ளிய வளர்ப்புத் தாய் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
சிறுவனை கொதிநீரில் தள்ளிய குற்றச்சாட்டில் 29 வயதான சிறுவனின் வளர்ப்புத் தாய் மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
ஏழு வயது சிறுவனை கொதிநீர் அடங்கிய பாத்திரத்திற்குள் கையை இடுமாறு வற்புறுத்தியுள்ளதாகவும் பின்னர் அதனை தந்தையிடம் கூற முற்படும் போது வளர்ப்புத் தாய் சிறுவனை தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெறும் போது சிறுவனின் தந்தை வெளியே சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். சம்பவம் தொடர்பில் கைதான பெண் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
Related posts:
புகையிரத ஓட்டுனர்களாக இராணுவத்தினரை பயிற்றுவிக்க அனுமதி!
சுமார் 68 ஆயிரம் இலங்கையர்கள் திரும்ப காத்திருப்பு – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தகவல்!
அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் - வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மீண்டும் வலியுறுத்த...
|
|