திருகோணமலையில் கடுமையான வறட்சி 400 குடும்பங்கள் பாதிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/62396439_drought.jpg)
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வறட்சி காரணமாக 440 குடும்பங்களில் உள்ள 1,381பேர் பாதிக்கப்ப்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துநகர் பகுதியில் 200 குடும்பங்களும், மங்கையோது பகுதியில் 225 குடும்பங்களும் மற்றும் வெலிகம பகுதியில் 15 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் த...
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒரு...
|
|