கடந்தாண்டில் 334821 பிறப்புக்ள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/images-5.jpg)
கடந்த ஆண்டில் 334821 பிறப்புக்களும், 131614 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் தொடர்பில் மொத்தமாக 642374 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைத்தியசாலைகள் மற்றும் கிராமிய பதிவாளர்களின் ஊடாக இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளில் 8893 பிறப்புக்களும் 230 விவாகங்களும், 470 மரணங்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் பதினொரு லட்சம் காணி உறுதிகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் 1200 பதிவாளர்கள் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஆர்ப்பாட்டங்களில் அப்பாவி மாணவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பங்கு கொள்கின்றனர்!
உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு!
ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிக மோசமான நிலைக்கு செல்லும் - நாடாளுமன்ற...
|
|