பல்வேறு கோரிக்கைகளுடன் வருகைதந்த மக்கள் – முடியுமானரை தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2024/06/6dd133e9-5f7e-4875-b0be-7e435c865633.jpeg)
யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் கோரிக்கைகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க வருகை தந்திருந்த மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் அவற்றில் பல விடயங்களுக்கு தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது சங்க கட்டமைப்பிற்குள் யாழ் மாநகர சபையில் நீண்டகாலமாக பணிபுரிந்து நியமனம் கிடைக்காதவர்களுக்கு நியமனம் பெற்று தருமாறும் தமது தொழில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் அதன் வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்து கலந்துரையாடினர்.
இதேவேளை தென்மராட்சி, படித்த மகளிர் திட்டத்தினை சேர்ந்த கிராமிய மகளிர் அமைப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்
படித்த மகளிர் திட்டத்தில் நீண்ட காலமாக வசிக்கின்ற மக்கள் தமது பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்பார்த்துள்ள காணியை பிறிதொரு திணைக்களகத்திற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை தமது பிரதேசத்தின் நலன் கருதி பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்தனர் .
இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் உரிய தரப்பினரோடு கலந்துரையாடி இரண்டு வாரத்தில் சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|