கடற்படை – நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!

Thursday, October 27th, 2022

இலங்கையின் கடல் பரப்பில், கடலுக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் அமைச்சின் நாரா நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சட்ட ஏற்பாடுகள் மூலம் நாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடப்பாடுகள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

இதனிடையே

வெளிநாட்டு தனியார்  முதலீட்டாளர்களின் நிதிப் பங்களிப்புடன், நாடளாவிய ரீதியில் கண்டல் தாவரங்களை நாட்டி பராமரிப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த திட்டத்தின் மூலம் சுமார் 40,000 ஏக்கர் பிரதேசத்தில் கண்டல் தாவரங்களை நாட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உடனடியாக சுமார் 400 தொழில் வாய்ப்புக்களும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
அந்தகார இருள் நீங்கிய நித்திய ஒளி நீடித்து நிலவட்டும்,... - அமைச்சர் டக்ளஸ் நத்தார் வாழ்த்து!

"சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்" எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ...
தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது -  நாடாளு மன்றில் டக...
தமிழ் மக்கள் அனுபவிக்கும் அமைதிச் சூழலை மேலும் வலுப்படுத்த வேண்டும். - கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு...