திருகோணமலை மறை மாவட்ட ஆயரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்திப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/03/206e9699-a7ba-4322-9f4f-b0e67e44b84e.jpg)
திருகோணமலை மறை மாவட்ட ஆண்டகை நோயல் இமானுவேல் அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் பனைசார் உற்பத்திகளை விருத்தி செய்வதன் மூலம் மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தினை உருவாக்கவும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவதற்கு அமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆயர் இதன்போது அமைச்சரிடம் முன்மொழிந்திருந்தார்.
திருமலை மாவட்ட ஆயரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சு மற்றும் கிராமிய எழுச்சி திட்டத்தின் உள்ளூர் கைத்தொழில் துறைகளை மேம்மபடுத்துவதற்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.
Related posts:
குடாநாட்டில் அதிகரித்துவரும் தொழிலின்மைப் பிரச்சினையே சமூக சீர்கேடுகளுக்கான பிரதான காரணமாக விளங்குகி...
உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியல் தலைமையே எமக்கு வேண்டும் – முல்லை மக்கள் ஆதங்கம்!
'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' - அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆ...
|
|