அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்க யாழ்ப்பாணத்தில்அலையென திரண்ட மக்கள்!

அமைச்சராக பொறுப்பேற்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணத்தில் அலையென திரண்டு மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இன்று மாலை யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பெருங்கரகோசங்களுக்கு மத்தியில் பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்தனர்.
யாழ் மத்திய கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வேம்படி சந்தியிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ வைத்தியசாலை வீதியூடாக ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு வைத்தியசாலை முன்றல், யாழ் மத்திய பஸ் நிலையம், பழக்கடை வியாபார நிலையம் ஆகிய இடங்களில் ஊழியர்களாலும் வர்த்தகர்களாலும் வரவேற்கப்பட்டார். பின்னர் கஸ்தூரியார் வீதியூடாக தொடர்ந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகரின் வர்த்தகர்களாலும் பொதுமக்களாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டார்.
பிரதான வீதியூடாக அழைத்துவரப்பட்டு ஸ்ரான்லி வீதியூடாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கட்சியின் தோழர்களாலும் பொதுமக்களாலும் வழங்கப்பட்டது. இதன்போது அரை மணிநேரத்திற்கு தலைரமைச் செயலகம் அமைந்துள்ள்ள ஸ்ரான்லி வீதி பெரும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|