14 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – 21 வயது இளைஞர் தலைமறைவு -வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Saturday, February 15th, 2025

14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: