விரைவில் பாலின் விலை அதிகரிக்கும் – அரசிடம் விடுக்கப்பட்டது அவசர கோரிக்கை!
Tuesday, October 8th, 2024
உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த அரசாங்கம் பாலின் விலையைக் குறைத்தமை காரணமாக பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் உள்ளூர் உற்பத்தி பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
மிக விரைவில் பசும்பாலின் விலை அதிரிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றும் நாமல் கருணாரத்தின தெரிவித்துள்ளார்
00
Related posts:
நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என ப...
நல்லூர் பிரதேச உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் கலந்துரையாடல்!
|
|
|


