வடக்கு – கிழக்கு காணி  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு உதவும் ஐ. நா. சபை! 

Sunday, September 7th, 2025


போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோதல் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஏராளமான உரிமைகோரல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. 

இந்தநிலையில், விவசாய அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனங்களுடன் தாம் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
900

Related posts: