கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை எதிர்வரும் மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் – நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தெரிவிப்பு!

Friday, May 14th, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைக்குழு கூடி அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டங்களை மே மாதம் 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நடத்த முடிவு செய்துள்ளது.

அத்துடன் கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களால் பின்பற்றப்பட்டு நாடாளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை  மே 19, 20 திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த யோசனை 19 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அது 20ஆம் திகதி முற்பகல் 10.00 மணிமுதல் மாலை 4.30 மணி வரை தொடரும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 00

Related posts: