வங்கி அட்டை மூலமும் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகம்!

Friday, November 14th, 2025


…..
எந்தவொரு வங்கி அட்டை மூலமும் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணத்தை செலுத்திய பிறகு மீதமுள்ள பணத்தை செலுத்தாதது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது என்றும், அதற்கு தீர்வாக வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் துறைசார் அமைச்சர் கூறியுள்ளார்.

வரவு செலவுத்திடம் இரண்டாவது வாசிப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், LankaPay – GovPay மூலம் தற்போது பில்லியன் கணக்கான ரூபாய்கள் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts:

தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் - அரச...
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி த...
புதிய ஆண்டின் நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 05 ஆம் திகதி கூட்டப்படும் - நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக ...