யாழ் மாநகர சபை வேட்பாளர்களை சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Friday, April 4th, 2025
யாழ் மாநகர சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை சந்தித்து தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கடசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடியாடியுள்ளார்.
இதன்போது தமிழ் தேசியத்தினை பாதுகாக்கும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மாத்திரமே செயற்படுவதை சுட்டிக்காட்டியதுடன், எமது கட்சி பற்றி அவதூறுகளை பரப்பும் வகையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தவறான பிரசாரங்களை முறியடிக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் சரியான கருத்துக்களை தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்சி வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னேடுத்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், வேட்பாளர்களினதும் கட்சி, செயற்பாட்டாளர்களினதும் அயராத உழைப்பு வெளிப்படுத்தப்படுமாயின், எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளிப்படுத்தினார்
000
Related posts:
|
|
|


