யாழ் போதனாவுக்கு 9 பார ஊர்திகளில் வருகின்றது மருந்துப் பொருள்கள் – பணிப்பாளர்!

Sunday, May 10th, 2026

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய உடனடியாக 9 பார ஊர்திகளில் மருந்துப் பொருள்கள் எடுத்து வரப்படுவதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்தின் காரணமாக அழவடைந்தது.

இதன் காரணமாக போதனா வைத்தியசாலை நோயாளர்களிற்கு வழங்கும் எந்தவொரு சேவையும் பாதிப்படையாது தொடர்ச்சியாக முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதேகாலத்தில் தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு என்பவற்றை கண்டறியவதற்காகவும் உடனடியாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து ஓர் விசாரணைக் குழு போதனா வைத்தியசாலைக்கு வரவுள்ளனர்.

இவை அனைத்தும் இடம்பெறும் காலத்தில் போதனா வைத்தியசாலையில் இருந்து நாளை 3 பார ஊர்திகள் கொழும்பு சென்று தேவையான மருந்துப் பொருள்களை ஏற்றிவரவுள்ளது.

மத்திய மருந்தகத்தில் இருந்து 5 பார ஊர்தியும் அநுராதபுரம் வைத்தியசாலை வாகனம் ஒன்றுமாக மொத்தம் 9 பார ஊர்திகளில் தேவையான அனைத்து வகை மருந்துகளும் எதிர்வரும் 4 தினங்களிற்குள் எடுத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.

Related posts:

வலி.தென்மேற்கில் டெங்கு தாக்கம் - சடுதியாக அதிகரிப்பு 1500 வீடுகள் சோதனை: 12பேருக்கு எதிராக வழக்கு!
திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ....
இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்ட...

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம் - விரைவில் நடைமுறையாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமு...
2023ஆம் கல்வி ஆண்டில் பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச...
வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!